ஆதியிலிருந்தே சைவக்குருமார்களினால் நித்திய நைமித்திய வழிபாடாற்றப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வருகின்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆலயத்திற்கு நித்திய நைமித்தியபூஜை வழிபாடுகளை செய்வதற்கென மன்னன் தென்னிந்தியாவில் வேதாரணியம் என்ற இடத்திலிருந்து சைவக்குருமார் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமத் கயிலாசநாதக்குருக்கள் குடும்பத்தாரை வருவழைத்து பரம்பரையாகப் பரிபாலித்து பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அவர்களது பரம்பரையினரே தற்போதும் இவ் ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர்.