ஒவ்வொரு மாதமும் வருகின்ற விநாயக சதுர்த்தி தினத்தில் பகல் மூலமூர்த்திக்கு உருத்திராபிடேகம் இடம்பெற்று சதுர்த்தி உற்சவத்திற்கென பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிய உற்சவமூர்த்தி விநாயகருக்கு விஷேட பூசை இடம்பெறும். தொடர்ந்து சிறிய எலி வாகனத்தில் விநாயக் பெருமான் வீதியுலா வருதலும் இடம்பெறுகின்றது. அத்தோடு ஆவணி சதுர்த்தி அன்று மூலமூர்த்திக்கு ஸ்நபன அபிடேகம் நடைபெற்று விநாயகப் பெருமான் திருவீதியுலா வருதல் என்பன இடம்பெறும்.