சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை

சைவசிறார்கள் நற்பிரஜைகளாக சிறுவயதிலிருந்தே அறநெறிக்கல்வி போதிக்கப்பட்டு வளர்க்கப்படவேண்டும் எனும் நோக்கோடு எமது ஆலயத்தினால் சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை பாலஸ்தாபன தினமான 20.04.2016 புதன்கிழமை அன்று ஆலய முதல்வர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத் சைதன்யா அவர்கள் கலந்து மாணவர்களுக்கான அறநெறி வகுப்புக்களை ஆரம்பித்து வைத்தார்கள். அங்குரார்பண வைபவத்தில் மூத்த சைவக்குருமார்களும் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30-7.30 மணிவரை யோகாசனப் பயிற்சியும், மு.ப. 9.00 – 10.00 மணிவரை அறநெறி வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. இதில் எமது கிராமத்துச் சிறார்கள் பலர் கலந்து பயன்பெற்றுவருகின்றார்கள்.